<p><span style="color: #ff0000"><strong>‘‘சா</strong></span>க்பீஸ்வெச்சு பிளாக் போர்டில் ஓவியம் வரையலாம், அந்த சாக்பீஸ்களையே கிராஃப்ட்டா மாற்றிக்காட்ட முடியுமா?”</p>.<p>மேட்டுப்பாளையம், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியின் ஓவிய வகுப்பில் நுழைந்து கேட்டதும், சவாலுக்குத் தயாரானார்கள் மாணவர்கள். ஓவிய ஆசிரியர் இளங்கோ, அவர்களுக்கு</p>.<p> பிளாக் சார்ட், சாக்பீஸ்களைக் கொடுத்தார்.</p>.<p><span style="color: #800000"><strong>ஹர்ஷனா:</strong></span> ‘‘கே.ஜி வகுப்பு படிக்கும்போது, எனக்கு கலர் சாக்பீஸ்னா ரொம்பப் பிடிக்கும். ஒவ்வொரு பாட வேளை முடிஞ்சதும், போர்டுக்குக் கீழே கிடக்கிற சாக்பீஸ் துண்டுகளை எடுத்துவெச்சுக்குவேன்.’’</p>.<p><span style="color: #800000"><strong>பூரண விகாசினி:</strong></span> ‘‘நான் சுவத்துல கிறுக்கிடுவேன்னு, எங்க வீட்டுல சாக்பீஸைக் கையால தொடவே விட மாட்டாங்க.”</p>.<p><span style="color: #800000"><strong>தீபிகா: </strong></span>‘‘நான்தான் எங்க வீட்டுல கோலம் போடுவேன். ‘சாக்பீஸ்ல போடாதே’னு பாட்டி சொல்லிக்கிட்டே இருப்பாங்க.’’</p>.<p><span style="color: #800000"><strong>முகுந்த்:</strong></span> ‘‘டிஃபரென்ட் கலர் பென், பென்சில்ஸ் வந்துட்டாலும் சாக்பீஸால எழுதுறது தனி அழகுதான்.’’</p>.<p>சாக்பீஸ் பற்றிய அவர்களின் நினைவு அரட்டையோடு, கைகள் பரபரப்பாக இயங்கின. வகுப்பில் இருந்த காகிதத் துண்டுகள், நூல் ஆகியவற்றைத் தங்களின் சாக்பீஸ் கிராஃப்ட் செய்ய துணைக்கு அழைத்துக்கொண்டார்கள்.</p>.<p><span style="color: #800000"><strong>ஹர்ஷனா:</strong></span> ‘’எனக்கு, செடி ரொம்பப் பிடிக்கும். அதனால, சாக்பீஸையே வெச்சு தொட்டி செஞ்சு, அதுல செடி வரைஞ்சேன்.”</p>.<p><span style="color: #800000"><strong>சிநேகா:</strong></span> ‘‘ரொம்ப சந்தோஷத்துல தொட்டி கலரிலேயே பூக்களுக்கும் சாக்பீஸை வைக்கிறே பாரு.”</p>.<p><span style="color: #800000"><strong>தீபிகா:</strong></span> ‘‘நீ மட்டும் என்னவாம், புல் தரையில சாக்பீஸ் மரம் வளர்க்கிறே.’’ </p>.<p><span style="color: #800000"><strong>சிநேகா:</strong></span> ‘‘நானாச்சும் பரவாயில்லை. பூ வரையிறேன்னு ஏதோ கூடையை உருவாக்கிட்டு இருக்கா பூரணா.”</p>.<p><span style="color: #800000"><strong>பூரணா:</strong></span> ‘‘ஹலோ, இது சூரியகாந்தி.’’ </p>.<p><span style="color: #800000"><strong>முகுந்த்: </strong></span>‘‘அப்படியா, ரிம் இல்லாத சக்கரம்னு நினைச்சேன்.’’</p>.<p><span style="color: #800000"><strong>வருண்:</strong></span> ‘‘நேத்து சைக்கிளில் ஏதோ ப்ராப்ளம்னு சொன்னியே இதுதானா?”</p>.<p><span style="color: #800000"><strong>பூரணா:</strong></span> ‘‘ஸ்பைடர்மேன் பண்றேன்னு சொல்லிட்டு, ஸ்பைடர் வெப் பண்ணியிருக்கா சிநேகா.”</p>.<p><span style="color: #800000"><strong>முகுந்த்:</strong></span> ‘‘அட, நீ வேற. எங்க பாட்டி சுடுற கம்ப்யூட்டர் முறுக்கு மாதிரியில இருக்கு.”</p>.<p>ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்து சிரித்துக்கொண்டாலும், இலை இல்லாத பூக்கள், புகை இல்லாத ராக்கெட், நீரில்லா மீன், சிலந்தி இல்லாத வலை எனப் பல வகையில் சாக்பீஸ் கிராஃப்ட்டுகளை வரைந்து அசத்தினர்.</p>.<p>மனதுக்குள் எழுந்த கற்பனையை, சார்ட்டில் கொண்டுவந்த திருப்தி அவர்களின் முகங்களில் மிளிர்ந்தது.</p>.<p style="text-align: right"><span style="color: #0000ff"><strong>படங்கள்: பா.பிரபாகரன்</strong></span></p>
<p><span style="color: #ff0000"><strong>‘‘சா</strong></span>க்பீஸ்வெச்சு பிளாக் போர்டில் ஓவியம் வரையலாம், அந்த சாக்பீஸ்களையே கிராஃப்ட்டா மாற்றிக்காட்ட முடியுமா?”</p>.<p>மேட்டுப்பாளையம், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியின் ஓவிய வகுப்பில் நுழைந்து கேட்டதும், சவாலுக்குத் தயாரானார்கள் மாணவர்கள். ஓவிய ஆசிரியர் இளங்கோ, அவர்களுக்கு</p>.<p> பிளாக் சார்ட், சாக்பீஸ்களைக் கொடுத்தார்.</p>.<p><span style="color: #800000"><strong>ஹர்ஷனா:</strong></span> ‘‘கே.ஜி வகுப்பு படிக்கும்போது, எனக்கு கலர் சாக்பீஸ்னா ரொம்பப் பிடிக்கும். ஒவ்வொரு பாட வேளை முடிஞ்சதும், போர்டுக்குக் கீழே கிடக்கிற சாக்பீஸ் துண்டுகளை எடுத்துவெச்சுக்குவேன்.’’</p>.<p><span style="color: #800000"><strong>பூரண விகாசினி:</strong></span> ‘‘நான் சுவத்துல கிறுக்கிடுவேன்னு, எங்க வீட்டுல சாக்பீஸைக் கையால தொடவே விட மாட்டாங்க.”</p>.<p><span style="color: #800000"><strong>தீபிகா: </strong></span>‘‘நான்தான் எங்க வீட்டுல கோலம் போடுவேன். ‘சாக்பீஸ்ல போடாதே’னு பாட்டி சொல்லிக்கிட்டே இருப்பாங்க.’’</p>.<p><span style="color: #800000"><strong>முகுந்த்:</strong></span> ‘‘டிஃபரென்ட் கலர் பென், பென்சில்ஸ் வந்துட்டாலும் சாக்பீஸால எழுதுறது தனி அழகுதான்.’’</p>.<p>சாக்பீஸ் பற்றிய அவர்களின் நினைவு அரட்டையோடு, கைகள் பரபரப்பாக இயங்கின. வகுப்பில் இருந்த காகிதத் துண்டுகள், நூல் ஆகியவற்றைத் தங்களின் சாக்பீஸ் கிராஃப்ட் செய்ய துணைக்கு அழைத்துக்கொண்டார்கள்.</p>.<p><span style="color: #800000"><strong>ஹர்ஷனா:</strong></span> ‘’எனக்கு, செடி ரொம்பப் பிடிக்கும். அதனால, சாக்பீஸையே வெச்சு தொட்டி செஞ்சு, அதுல செடி வரைஞ்சேன்.”</p>.<p><span style="color: #800000"><strong>சிநேகா:</strong></span> ‘‘ரொம்ப சந்தோஷத்துல தொட்டி கலரிலேயே பூக்களுக்கும் சாக்பீஸை வைக்கிறே பாரு.”</p>.<p><span style="color: #800000"><strong>தீபிகா:</strong></span> ‘‘நீ மட்டும் என்னவாம், புல் தரையில சாக்பீஸ் மரம் வளர்க்கிறே.’’ </p>.<p><span style="color: #800000"><strong>சிநேகா:</strong></span> ‘‘நானாச்சும் பரவாயில்லை. பூ வரையிறேன்னு ஏதோ கூடையை உருவாக்கிட்டு இருக்கா பூரணா.”</p>.<p><span style="color: #800000"><strong>பூரணா:</strong></span> ‘‘ஹலோ, இது சூரியகாந்தி.’’ </p>.<p><span style="color: #800000"><strong>முகுந்த்: </strong></span>‘‘அப்படியா, ரிம் இல்லாத சக்கரம்னு நினைச்சேன்.’’</p>.<p><span style="color: #800000"><strong>வருண்:</strong></span> ‘‘நேத்து சைக்கிளில் ஏதோ ப்ராப்ளம்னு சொன்னியே இதுதானா?”</p>.<p><span style="color: #800000"><strong>பூரணா:</strong></span> ‘‘ஸ்பைடர்மேன் பண்றேன்னு சொல்லிட்டு, ஸ்பைடர் வெப் பண்ணியிருக்கா சிநேகா.”</p>.<p><span style="color: #800000"><strong>முகுந்த்:</strong></span> ‘‘அட, நீ வேற. எங்க பாட்டி சுடுற கம்ப்யூட்டர் முறுக்கு மாதிரியில இருக்கு.”</p>.<p>ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்து சிரித்துக்கொண்டாலும், இலை இல்லாத பூக்கள், புகை இல்லாத ராக்கெட், நீரில்லா மீன், சிலந்தி இல்லாத வலை எனப் பல வகையில் சாக்பீஸ் கிராஃப்ட்டுகளை வரைந்து அசத்தினர்.</p>.<p>மனதுக்குள் எழுந்த கற்பனையை, சார்ட்டில் கொண்டுவந்த திருப்தி அவர்களின் முகங்களில் மிளிர்ந்தது.</p>.<p style="text-align: right"><span style="color: #0000ff"><strong>படங்கள்: பா.பிரபாகரன்</strong></span></p>