Published:Updated:

`என்னைப் பற்றிப் பேசுங்கள்; குடும்பத்தை இழுக்காதீர்கள்!'- சர்ச்சையால் வருந்தும் ரோஹித்

மனைவியுடன் ரோஹித்

`எங்கள் குடும்பங்கள் எங்களை ஆதரிக்கவும், எங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவுமே அங்கு வந்தன.'

Published:Updated:

`என்னைப் பற்றிப் பேசுங்கள்; குடும்பத்தை இழுக்காதீர்கள்!'- சர்ச்சையால் வருந்தும் ரோஹித்

`எங்கள் குடும்பங்கள் எங்களை ஆதரிக்கவும், எங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவுமே அங்கு வந்தன.'

மனைவியுடன் ரோஹித்

2019-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்ததற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்றும், இதுதொடர்பாக பிசிசிஐ விரிவாக ஆய்வு நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டன. அவற்றில் முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டது இந்திய வீரர்கள் தங்கள் மனைவிகளுடன் அனுமதிக்கப்பட்ட காலத்தைவிட அதிகமாக தங்கிய விஷயம்தான். உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னர், வீரர்களுடன் அவர்களது மனைவிகள் தங்குவதற்குக் கட்டுப்பாடு விதித்தது பி.சி.சி.ஐ.

இந்திய அணி
இந்திய அணி
AP

அதாவது, தொடர் தொடங்கி 21 நாள் ஆன பிறகே குடும்பத்தினருடன் வீரர்கள் இருக்க வேண்டும். அதுவும் 15 நாள்கள்தான் தங்கிக்கொள்ள வேண்டும் என வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி அனுமதி வழங்கியது. அதன்படி சில போட்டிகள் கழித்தே வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் இணைந்துகொண்டனர். ஆனால், நிர்வாக கமிட்டியின் இந்த அனுமதியை மீறி, மூத்த வீரர் ஒருவர் உலகக் கோப்பை நடந்த 7 வாரமும் மனைவியுடன் தங்கியிருந்ததாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டது.

இதுசர்ச்சையை ஏற்படுத்த அணியின் நிர்வாக மேலாளர் சுனில் சுப்ரமணியத்திடம் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி விளக்கம் கேட்டிருந்தது. ஆனாலும் அந்த மூத்த வீரர் யார் என்ற விவரங்கள் வெளியிடவில்லை. இதனால் வீரர்கள் தங்கள் மனைவிகளுடன் அனுமதியின்றித் தங்கியிருந்தது தொடர்ந்து சர்ச்சையாகிக்கொண்டே இருக்கிறது. இதற்கிடையே, அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா பி.டி.ஐ நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசியுள்ளார். அதில், `` எங்கள் குடும்பங்கள் எங்களை ஆதரிக்கவும், எங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவுமே அங்கு வந்தன.

கிரிக்கெட் வீரர்களின் குடும்பங்கள்
கிரிக்கெட் வீரர்களின் குடும்பங்கள்

இந்தச் செய்திகள் வெளிவந்தபோது சில நண்பர்கள் என்னிடம்வந்து இது உண்மைதானா இல்லையா என்று கேட்டனர். அதற்கு நான் சிரிக்க மட்டும் செய்தேன். ஆனாலும் இந்தச் செயல் தொடர்ந்துகொண்டே இருந்தது. இதில் என் குடும்பத்தையும் சேர்த்துக்கொண்டார்கள். என்னைப் பற்றிப் பேசுங்கள். ஆனால் என் குடும்பத்தை இதில் இழுக்காதீர்கள். எனது குடும்பத்தினர் வேறு எதையும் பற்றி உண்மையிலேயே அக்கறை காட்டாததால் அவர்களை இதில் இழுக்க வேண்டாம். விராட் கோலிக்கு இதே நிலைதான். குடும்பங்கள் நம் வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாக இருப்பதை உணர்ந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என வேதனை தெரிவித்துள்ளார்.