Published:Updated:

308 ரன்கள் அடித்து, 308 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும் ! `பரிதாப' பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ( ட்விட்டர் )

பாகிஸ்தான் அணியின் அரையிறுதிக் கனவு முடிவுக்கு வந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்!

Published:Updated:

308 ரன்கள் அடித்து, 308 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும் ! `பரிதாப' பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணியின் அரையிறுதிக் கனவு முடிவுக்கு வந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ( ட்விட்டர் )

உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்று விட்டன. நான்காவது அணிக்கான போட்டியில் நியூசிலாந்து அணி முன்னணியில் உள்ளது.

பாகிஸ்தான்
பாகிஸ்தான்
ட்விட்டர்

9 ஆட்டங்களில் 11 புள்ளிகளை நியூசிலாந்து அணி பெற்றுள்ளது இந்த அணியின் நெட் ரன் ரேட் +0.175 ஆக உள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான் 8 ஆட்டங்களில் விளையாடி 9 புள்ளிகளை ஈட்டியுள்ளது. நெட் ரன் ரேட் -0.792 என உள்ளது.

இதனால், பாகிஸ்தான் அணியின் அரையிறுதிக் கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். பாகிஸ்தான் அணி கடைசி ஆட்டத்தில் வங்கதேச அணியுடன் மோதுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அணிக்கு 11 புள்ளிகள் கிடைக்கும்.

பாகிஸ்தான் அணி
பாகிஸ்தான் அணி
ட்விட்டர்

நியூசிலாந்து , பாகிஸ்தான் அணிகள் தலா 11 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது, நெட் ரன் ரேட் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதனால் , நியூசிலாந்து அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

நாளைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தால், குறைந்தது 308 ரன்கள் எடுக்க வேண்டும். அப்போதுதான் அரையிறுதி வாய்ப்பு குறித்து பாகிஸ்தான் சிந்திக்கவே முடியும். மேலும் வங்கதேசத்தை 1 ரன் கூட எடுக்கவிடாமல் ஆல்- அவுட் செய்ய வேண்டும். அதாவது 308 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். 350 ரன்கள் எடுத்தால் 311 ரன்களிலும் 400 ரன்கள் எடுத்தால் 316 ரன்களிலும் 450 ரன்கள் எடுத்தால் 321 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற வேண்டும்.

நியூசிலாந்து அணி
நியூசிலாந்து அணி

ஒரு வேளை பாகிஸ்தான் அணிக்கு முதலில் பேட் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால் தானாகவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிடும். எனவே, 2019- உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியின் பயணம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என்றே நம்பப்படுகிறது. ஏதாவது மிராக்கில் நடந்தால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு பாகிஸ்தான் அணிக்கு இருக்கிறது.

நாளையை ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. முன்னதாக , இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி தோற்றபோது, பாகிஸ்தான் அணியின் முனனாள் வீரர்கள் இந்திய வீரர்களைச் சாடியது குறிப்பிடத்தக்கது.