Published:Updated:

4​ ​மணி நேரம், 18​ ​நிமிடங்கள் நீரில் மிதந்து சாதனை படைத்த​ ​ 6​ ​வயதுச் சிறுமி​!

சிறுமி டைசா

தொடர்ந்து ​5​ ​மணி நேரம் நீரில் மிதந்து உலக சாதனை படைப்பதற்குத் திட்டமிட்ட நிலையில், மழை காரணமாக முன்கூட்டியே நிறுத்தப்பட்டது. இருந்தபோதிலும் 4​ ​மணி நேரம் 18​ ​நிமிடங்கள் இடைவிடாது நீரில் மிதந்து சிறுமி டைசா, உலக சாதனை படைத்தார்.

Published:Updated:

4​ ​மணி நேரம், 18​ ​நிமிடங்கள் நீரில் மிதந்து சாதனை படைத்த​ ​ 6​ ​வயதுச் சிறுமி​!

தொடர்ந்து ​5​ ​மணி நேரம் நீரில் மிதந்து உலக சாதனை படைப்பதற்குத் திட்டமிட்ட நிலையில், மழை காரணமாக முன்கூட்டியே நிறுத்தப்பட்டது. இருந்தபோதிலும் 4​ ​மணி நேரம் 18​ ​நிமிடங்கள் இடைவிடாது நீரில் மிதந்து சிறுமி டைசா, உலக சாதனை படைத்தார்.

சிறுமி டைசா

​தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி​யைச் சேர்ந்த தம்பதி ரவிக்குமார் - சுபிக்க்ஷா​. இவர்களின் 6 வயது ​மக​ள்​​ டைசா தேனியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படித்து வருகிறார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சிறு வயதில் இருந்தே ​டைசா ​நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு வந்​தார். இந்நிலையில் 5​ ​மணி நேரம் இடைவிடாது நீரில் மிதக்கும் உலக சாதனை முயற்சியில் ஈடுபட​ பயிற்சி எடுத்து வந்தார்.​

சான்றிதழ் உடன் டைசா
சான்றிதழ் உடன் டைசா

​யுனிவர்சல் வேர்ல்டு ரெக்கார்ட் ஃபோரம் என்ற அமைப்பின் நடுவர் கின்னஸ் சுனில் ஜோசப் கண்காணிப்பில், தேனி விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் சாதனை முயற்சி நடைபெற்றது.

தொடர்ந்து ​5​ ​மணி நேரம் நீரில் மிதந்து உலக சாதனை படைப்பதற்குத் திட்டமிட்ட நிலையில், மழை காரணமாக  முன்கூட்டியே நிறுத்தப்பட்டது. இருந்த போதிலும் 4​ ​மணி நேரம் 18​ ​நிமிடங்கள் இடைவிடாது நீரில் மிதந்து சிறுமி டைசா உலக சாதனை படைத்தார். 

​இதற்கு முன்பு  மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 7​ ​வயது சிறுவன் 30​ ​நிமிடங்கள் நீரில் மிதந்தது உலக சாதனையாக இருந்தது. தற்போது அவரது சாதனையை சிறுமி டைசா முறியடித்துள்ளார்.‌ உலக சாதனை படைத்தற்காக  யுனிவர்சல் வேர்ல்டு ரெக்கார்ட் ஃபோரம் அமைப்பினர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி சிறுமியை கௌரவித்தனர். ​இதையறிந்த​ தேனி​ மக்கள் சமூக வலைதளங்களில் சிறுமிக்குப் பாராட்டு​ மழையைப் பொழிந்து வருகின்றனர்.

பயிற்சியாளர் விஜயகுமார் உடன் டைசா
பயிற்சியாளர் விஜயகுமார் உடன் டைசா

​இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்​, ’’​எங்கள் மகள் ​6​ ​மாத குழந்தையாக இருந்த போதே எங்களுடன் ஆற்றில் குளிக்கும் போது நீந்தும் முயற்சியில் ஈடுபட்டார்.‌ அவரது ஆர்வத்தை அறிந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் முறையாக நீச்சல் பயிற்சியில் ஈடுபட வைத்தோம்.‌ நன்றாக நீந்தக் கற்றுக்கொண்ட டைசா, சாதாரணமாக 3 முதல் 4​ ​மணி நேரம் வரை நீந்தி வந்தார். இன்​று 5​ ​மணி நேர உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். விரைவில் இதேபோன்று கடலில் இடைவிடாது நீரில் மிதந்து உலக சாதனை படைக்க வேண்டும் என்பதே ​அவருடைய ​அடுத்த இலக்கு’’ என்றனர்.